சென்னை: அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.