பாட்னா: ‘எனக்கு என்று எதுவும் வேண்டாம். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது ஒரே குறிக்கோள்,’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து, தனது தலைமையில் புதிய கூட்டணி ஆட்சியை ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் அமைத்துள்ளார். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடியுடன் நிதிஷ் கூட்டணி அமைத்தால், இந்த மாநிலத்தில் பாஜ.வை அவர் எளிதாக தோற்கடிப்பார் என்று ஐக்கிய ஜனதா மூத்த தலைவர் சில தினங்களுக்கு முன் கூறினார்.