மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு: வைகோ இரங்கல்

சென்னை:  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஓட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி மறைந்தார். கட்சியின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். மதிமுகவால் 3 நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24ம்தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: