கோவை: கோவை துடியலூரில் குப்பை தொட்டி ஒன்றில் அழகு நிலைய ஊழியரின் கை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று உடற்பாகங்கள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த 15ம் தேதி அடையாளம் தெரியாத நபரின் காய் ஒன்று துண்டாக கிடந்ததை தூய்மை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். 8 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரனை தொடங்கினர். காட்டூர் காவல்நிலையத்தில் 39 வயதான பிரபு கடந்த 15ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்திருந்த நிலையில், சோதனையில் அது அவருடைய கை தான் என்பது உறுதியானது.