சென்னை: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 25 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கத்தியைக்காட்டி மிரட்டி 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் மீது கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்யது அவரை கைது செய்தனர்.