ராணிப்பேட்டை: ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம் அடைந்தார். ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்து (16). இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ், முத்துவுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து ரூ.12 ஆயிரத்துக்கு செல்போன் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் உறவினர் மனோகருடன் வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று சென்றுள்ளார்.