ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே, வீட்டை எழுதி தரும்படி கேட்டு தந்தையை மகன்களே அடித்துக் கொன்றனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த ஆடையூர், குடியானூர் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (64). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி சீரங்கம்மாள். இவர்களுக்கு சரவணன் (35) (அரசு போக்குவரத்து கழக டிரைவர்), ராஜ்குமார் (31) (சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்) என்ற 2 மகன்கள் உள்ளனர். சீரங்கன் கருத்து வேறுபாடு காரணமாக சீரங்கம்மாளை விவாகரத்து செய்துவிட்டு, ராஜேஸ்வரி என்பவரை 2வதாக திருமணம் செய்து, ஜலகண்டாபுரம் அடுத்த சூரப்பள்ளி சோரையான் வளவில், புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார்.