திருவனந்தபுரம்: குருவாயூர் கோயில் மேல் சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத டாக்டரான கிரண் ஆனந்த் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தியை தேர்வு செய்வது வழக்கம். தற்போது மேல்சாந்தியாக உள்ள கிருஷ்ணசந்திரன் நம்பூதிரியின் பதவிக்காலம் இம்மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய மேல்சாந்தியாக குருவாயூர் கக்காடு பகுதியை சேர்ந்த கிரண் ஆனந்த் நம்பூதிரி (34) தேர்வு செய்யப்பட்டார்.