குருவாயூர் கோயிலில் யூடியூப் புகழ் மருத்துவர் மேல்சாந்தியாக நியமனம்

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயில் மேல் சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத டாக்டரான கிரண் ஆனந்த் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தியை தேர்வு செய்வது வழக்கம். தற்போது மேல்சாந்தியாக உள்ள  கிருஷ்ணசந்திரன் நம்பூதிரியின் பதவிக்காலம் இம்மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய மேல்சாந்தியாக குருவாயூர் கக்காடு பகுதியை சேர்ந்த கிரண் ஆனந்த் நம்பூதிரி (34) தேர்வு  செய்யப்பட்டார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இவர் குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக இருப்பார். புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிரண் ஆனந்த் நம்பூதிரி ஒரு ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசியும் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர்.

Related Stories: