தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் தூண் இடிந்து விழுந்ததால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.