மாஸ்கோ: கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் மீண்டும் பழையபடி அஸ்தானா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து 1991ல் சுதந்திரம் பெற்ற கஜகஸ்தான் தனது தலைநகரை அல்மாட்டியில் இருந்து அஸ்தானாவுக்கு மாற்றியது. சுமார் 30 ஆண்டாக அதிபராக நூர்சுல்தான் நாசர்பயே ஆட்சி செய்தார். கடந்த 2019ல் அவரது அரசியல் வாரிசான காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அதிபராக பொறுப்பேற்றார். அவர் தலைநகர் அஸ்தானாவின் பெயரை நூர் சுல்தான் என கடந்த 2019ல் மாற்றினார். இதற்கிடையே, வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் கஜகஸ்தானில் டோகாயேவ் ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர்.