திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 425 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 32 ஆயிரத்து 693 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.