வேலூர்: வேலூரில் காவல்நிலையம் அருகே நள்ளிரவு பிச்சை எடுக்கும் பெண்ணிற்கு, பெண் போலீஸ்காரர் பிரசவம் பார்த்ததில், அழகான பெண் குழந்தை பிறந்தது. வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக இருப்பவர் இளவரசி. இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் பணிக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தபோது எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுது கொண்டிருந்தார். சத்தம் கேட்டு, இளவரசி அருகே சென்று பார்த்தபோது, பிச்சை எடுக்கும் இளம்பெண் பிரவச வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இளம்பெண்ணுடன் 6 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது.