பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாள்: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  

பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் பிறந்த நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் உங்களால் மேற்கொள்ளப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரச்சாரம் உங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் பிறந்த நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: நாட்டில் அரசியலுக்கு புதிய பரிமாணத்தை அளித்த மோடிஜி, வளர்ச்சியுடன் ஏழைகளின் நலனுக்கும் முழு முக்கியத்துவம் அளித்துள்ளார். மக்களுடன் தொடர்புகொள்வதும், மக்களுடன் தொடர்புகொள்வதும், நாட்டின் நாடித்துடிப்பை வலுவாகப் பிடிப்பதும் அவர்களை இந்திய மக்களின் மனதுடனும் மக்களுடனும் இணைக்கிறது. இந்தியாவின் கெளரவத்தையும் மரியாதையையும் அவர்கள் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும், இதுவே சிறந்த வாழ்த்து என பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: