கவுகாத்தி: அசாமில் இருந்து பெறப்பட்ட யானைகளை பார்வையிட வரும் ஆய்வு குழுவுக்கு தமிழக அரசு அனுமதி, பாதுகாப்பு அளிக்க கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஜாய்மாலா உள்பட 9 யானைகள் அசாமில் இருந்து கடந்த 2010-15ம் ஆண்டுகளில் பெறப்பட்டன. இவற்றில் ஜாய்மாலாவை பாகன்கள் சித்ரவதை செய்யும் வீடியோவை பீட்டா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பாகன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, தகவல் அறிந்த அசாம் அரசு தமிழகத்துக்கு வழங்கிய யானைகளை பார்வையிட குழுவை அனுப்ப ஒப்புதல் கேட்டது. ஆனால், தமிழக அரசு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.