உங்கள் டென்னிஸ் விளையாட்டை நாங்கள் காதலித்தோம்: ஓய்வு அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து..!!

டெல்லி: சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர்  உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் விளையாடுகிறார் என லண்டன் சென்று போட்டியை நேரில் பார்க்கும் அளவிற்கு சச்சின் பெடரரின் தீவிர ரசிகன். எனவே பெடரர் ஓய்வை அறிவித்ததும் ட்விட்டரில் சச்சின் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். உங்கள் டென்னிஸ் விளையாட்டை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது என்றும் அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி என்றும் சச்சின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெடரரின் நண்பரும், சக போட்டியாளருமான ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால், இந்த நாள் வரக்கூடாது என்று விரும்பியதாக, தனிப்பட்ட முறையில் தனக்கும், டென்னிஸ் விளையாட்டுக்கும் இது சோகமான நாள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கலத்துக்கு உள்ளேயும், வெளியேயும், பல அற்புதமான தருணங்களை பகிர்ந்து கொண்டதற்காக பெடரருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். நடாலை தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் என பலரும் பெடரரின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: