144வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு முதல்வர் நாளை மரியாதை

சென்னை: பெரியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா சாலை சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 8.30 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மை செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதில், தமிழக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக  செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் தவறாது கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: