கனடாவில் உள்ள பிரபலமான கோயிலை சேதப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்: இந்தியா கடும் கண்டனம்

டொரன்டோ: கனடாவில் அமைந்துள்ள இந்து கோயிலை சேதப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள் , இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை எழுதியுள்ளனர். கனடா நாட்டில் உள்ள டொரன்டோவில் பிரபல இந்து கோயிலான பாப்ஸ் ஸ்வாமி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும், அந்த இடத்தில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாப்ஸ் ஸ்வாமி நாராயணன் கோயிலை சேதப்படுத்தி, இந்தியாவிற்கு எதிரான வாசகம்  வைத்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: