கோவை: கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு திரண்ட 7 அதிமுக எம்எல்ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை சுகுணாபுரம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் குவிந்தனர். கட்சியினரை வரவழைத்து வீட்டின் முன் போலீசார் விசாரணைக்கு செல்வதை தடுக்கும் வகையில் கோஷமிட்டனர். கேட் முன் நின்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.