ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம்: 9 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைமைச் செயலக பணியில் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று முதல் வரும் அக்டோபர் 12ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டப்படிப்புடன் தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பக்கல்வி இயக்குநராகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பக் கட்டணம் ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. அக்டோபர 17 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். செய்தியாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடைபெறும். தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: