சென்னை: தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைமைச் செயலக பணியில் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று முதல் வரும் அக்டோபர் 12ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டப்படிப்புடன் தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பக்கல்வி இயக்குநராகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.