டோக்கியோ: இந்தியா - ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, போர் விமானம் உள்ளிட்ட கூட்டு ராணுவ போர் பயிற்சியை மேம்படுத்த, 2+2 அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில், இந்தியாவின் தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கின்றனர். ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யாசுகாஜு ஹமாடாவுடன் ராஜ்நாத் சிங் ஒன்றரை மணி நேரம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமசா ஹயாசியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.