ஹிரித்திக் ரோஷனுக்கு பவுன்சராகணும்

சென்னை: ஹிரித்திக் ரோஷனுக்கு பவுன்சராக பணியாற்ற வேண்டும் என தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். பப்லி பவுன்சர் இந்தி படத்தில் தமன்னா நடித்துள்ளார். மதூர் பண்டார்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழிலும் இந்த படம் திரைக்கு வர உள்ளது. விஐபிக்களுக்கு தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களை பவுன்சர்கள் என அழைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே பவுன்சர்களாக பணியாற்றி வந்த நிலையில் பெண்களும் இந்த பணியில் சேர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பெண் பவுன்சர் பற்றிய கதையாக பப்லி பவுன்சர் படம் உருவாகியுள்ளது.

கிராமத்தில் இருக்கும் தமன்னா, பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டவர். ஜிம்முக்கு செல்வது, குஸ்தியில் ஈடுபடுவது என இவர் வேறு பாதையை தேர்வு செய்கிறார். இதனால் ஊரார் வேறு மாதிரியாக பேச ஆரம்பிக்கிறார்கள். இதையடுத்து மும்பைக்கு வரும் அவர், சூழ்நிலை காரணமாக பவுன்சராக மாறுகிறார். அதன் பிறகு பல்வேறு பிரச்னைகளை அவர் சந்திக்கிறார். இதுதான் இந்த படத்தின் கதை. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றிருந்தார் தமன்னா. அங்கு அவரிடம் பேசிய செய்தியாளர்கள், நிஜத்தில் பவுன்சராக உங்களுக்கு வேலை கிடைத்தால், யாருக்காக வேலை செய்வீர்கள் என கேட்டனர். அதற்கு தமன்னா, ‘ஹிரித்திக் ரோஷனுக்கு பவுன்சராக விரும்புகிறேன்’ என பதிலளித்தார். இந்த படம் செப்டம்பர் 23ம் தேதி ரிலீசாகிறது.

Related Stories: