சென்னை: தரமணியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தரமணியில் உள்ள Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந் நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. இந்த நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு பி.எஸ்சி மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டய படிப்பும், மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் பற்றிய படிப்பும் படிக்கலாம்.