கொழும்பு: இலங்ககையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 22வது சட்டத்திருத்தத்துக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமரையும், அமைச்சர்களையும் நீக்கம் செய்ய அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்துக்கே மீண்டும் அதிகாரம் வழங்குவது, இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற அம்சங்கள் அடங்கிய 22வது சட்டத்திருத்ததை பிரதமராக ரணில் இருக்கும்போது கொண்டு வரப்பட்டது. இதற்கு அதிபராக இருந்த கோத்தபய கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், அவர் பதவியை ராஜினாமா செய்தபின் அதிபரான ரணில் இச்சட்டத்தை கொண்டு வர தீவிர முயற்சித்து எடுத்தார். நீண்ட இழுபறிக்கு பின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.