ராய்ப்பூர்: லாலுவுக்கு சிறை தண்டனை கொடுத்த நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் மறுமணம் செய்து கொண்ட சம்பவம் ஜார்கண்ட் மற்றும் பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஷிவ்பால் சிங் (59), மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிக்கிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை கொடுத்தவர். இவரது மனைவி கடந்த 2006ம் ஆண்டு இறந்தார். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் நுதன் திவாரி (50) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.