புதுடெல்லி: அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனைங்களை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பரில் முதல் எஸ்-400 சாதனத்தை ரஷ்யா ஒப்படைத்தது. சீனா, பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் இந்திய இதை தற்போது நிறுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, இந்தியாவுக்கு மற்ற 4 எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்யா வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.