தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்பிற்கு நன்றி தெரிவித்து கேரளா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில்: திருவனந்தபுரத்தில் நேற்று (03.03.2022) தென் மண்டல கவுன்சிலர் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டுகளை தெரிவித்துள்ளார். விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தாம் நம்புவதாக தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: