தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மையம் திறக்கப்பட்ட மூன்று மாதங்களில் 1000 பேர் பயன் பெற்றுள்ளனர் என மருத்துவமனை டீன் கூறியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த மே மாதம் 29ம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இங்கு ரத்த பரிசோதனை, கொழுப்பு பரிசோதனை, சிறுநீரக, கல்லீரல் பரிசோதனை, தைராய்டு, மஞ்சகாமாலை நோய் கண்டறிதல், இசிஜி, எச்ஐவி, சிறுநீரகம், வயிறு ஸ்கேன் போன்ற 16 வகையான பரிசோதனைகளும், பெண்களுக்கு கர்பப்பை, வாய்ப்புற்று நோய் கண்டறிதல், எண்ணியல் மார்பக சிறப்பு பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது.