மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, கடந்த 31ம் தேதி பொதுமக்கள், இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். இதில், மாமல்லபுரத்தில் வைக்கப்பட்ட 3 சிலைகள், 2 நாட்கள் வழிபாடு நடத்தி நேற்று மாலை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த விநாயகர் சிலை ஊர்வலம் மாமல்லபுரம் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தது.