பள்ளிப்பட்டு: தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் பெண் பயனாளிகள் 100 பேருக்கு விலையில்லா ஆடுகளை எம்எல்ஏ சந்திரன் வழங்கினார். இரா.கி.பேட்டை ஒன்றியம் வெடியங்காடு ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஊரக பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் நேற்று வழங்கப்பட்டது. இதில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.