ஆவடி: ஆவடியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கான 3 நாள் தொடர் இன்டர் செக்டர் பேட்மின்டன் போட்டி நிறைவடைந்தது. இந்தியாவின் 26 மாநிலங்களை சேர்ந்த 150 சிஆர்பிஎப் வீரர்களுக்கான 3 நாள் தொடர் இன்டர்செக்டர் பேட்மின்டன் போட்டி கடந்த மாதம் 30ம் தேதி ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி மைய வளாகத்தில் துவங்கியது. இப்போட்டியை ஆவடி சிஆர்பிஎப் டிஐஜி தினகரன் துவக்கிவைத்தார். இதில் சுமார் 60 சிஆர்பிஎப் அதிகாரிகள், 91 வீரர்கள் பங்கேற்று, பேட்மின்டனில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். கடந்த 3 நாட்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த தொடர் பேட்மின்டன் போட்டியின் இறுதியில் ராஜஸ்தான் செக்டர் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது.