சென்னை: காவல் கரங்கள் குழுவுடன் உறுதுணையாக பணியாற்றும் தன்னார்வலர்கள் 150 பேருக்கு பாராட்டு தெரிவித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கினார்.சென்னை காவல் துறையின் மூலம், காவல் கரங்கள் என்ற உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், அவர்களை பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு சேவைகளை காவல் கரங்கள் உதவி மையம் செய்து வருகிறது.