தைபே: சீனாவுக்கு மீண்டும் ஆத்திரமூட்டும் வகையில் தைவான் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் நுழைந்தது உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் எந்தவொரு நாட்டின் செயல்பாட்டிற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனிடையே, கடந்த 2ம் தேதி தைவான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி, அந்நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் ஜலசந்தி பகுதியில் தீவிரமான ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்பி.க்கள், முக்கிய தலைவர்கள் 4 முறை தைவான் சென்றனர். இதற்கும் சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.