சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் இருந்த வருத்தத்தை தருகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கனடாவில் 65வது காமன்வெல்த் மக்களவை மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சென்றிருந்தனர். மாநாடு நடக்கும் பகுதிக்கு செல்லும்போது அந்தந்த நாட்டு சபாநாயகர்கள் தங்களின் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். ஓம்பிர்லா, அப்பாவு ஆகியோர் கையில் ஏந்தி சென்ற இந்திய தேசியக் கொடியில், ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் இருந்தது.