சென்னை, ஆக. 27: இறங்கும் முன்பே பேருந்தை நகர்த்தியதில் உயிரிழந்த மூதாட்டியின் வாரிகளுக்கு, 7.82 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெயம் என்ற மூதாட்டி 2014 டிசம்பர் 22ல் கே.கே.நகர்-அண்ணா சதுக்கம் சென்ற பேருந்தில் பயணித்தார். தியாகராய சாலை பஸ் நிறுத்தத்தில், ஜெயம் இறங்க முயன்ற போது ஓட்டுனர் பஸ்சை எடுத்ததால் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.