தருமபுரி: ஒகேனக்கல் காவிரியில் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (26.08.2022) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி நிலவரப்படி, சுமார் 50,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ,