மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.