மும்பை: பல்வேறு புதிய துறைகளில் அதானி குழுமம் மேற்கொண்ட பெரும் முதலீடுகளால் பெரும் கடன் சுமைகளில் சிக்கியுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஆசியாவின் முதன்மை பணக்காரரான அதானி நாடு முழுவதும் துறைமுக தொழிலை விரிவு படுத்தி வரும் வேலையில் பல்வேறு புதிய துறைகளிலும் முதலீடுகளை அதிகரித்து வருகிறார். பெரும்பாலான புதிய முதலீடுகளை கடன் பெற்றே அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. இதனால், பெரும் கடன் நெருக்கடியில் அதானி குழுமம் சிக்கியுள்ளதாக கிரெடிட் சைட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.