தைபே: தைவான் மீது சீனா ஆத்திரத்துடன் உள்ள நிலையில், அந்நாட்டிற்கு அமெரிக்க ஆளுநர் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா சபாநாயகர் பெலோசி தைவான் சென்றதை கண்டித்து, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தி போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், தைவான்-சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் குழு தைவான் சென்று வந்தது. இந்நிலையில், சீனாவை மேலும் வெறுப்பேற்ற, அமெரிக்காவின் இண்டியானா மாகாண ஆளுநர் எரிக் ஹோல்காம்ப், 4 நாள் பயணமாக தைவானுக்கு நேற்று முன்தினம் வந்தார்.