இஸ்லாமாபாத்: தீவிரவாத வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாளை மறுதினம் வரை கைது செய்ய தடை விதித்து அவருக்கு முன்ஜாமீன் கொடுத்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் காவல்துறை, நீதித்துறை மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது நேற்று முன் தினம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.