சென்னை: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ஏறக்குறைய ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தனர். இந்த கடன்தொகையை திரும்பச் செலுத்தாமல், தொடர்ந்து படம் எடுத்ததையடுத்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.