கொழும்பு : இலங்கையில் அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். பொருளாதார வீழ்ச்சியில் மக்கள் போராட்டம் வெடித்ததால் இலங்கையில் அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. ரணில் விக்ரம சிங்கே அதிபராக பொறுப்பேற்றதும் அரசுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். போராட்டத்தை ஒருங்கிணைத்த 100கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அதிபர் ரணில் பிறப்பித்த அவசர நிலை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கொழும்புவில் பல்கலைக்கழக மாணவர்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் அதிபர் ரணில் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.