சென்னை: சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 20ம் தேதி தொடங்கி செப்.5ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்தியாவின் இருள் அகற்றுவோம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்கிற அடிப்படையில், 50 லட்சம் வீடுகளை சந்தித்து, நேரடியாக மக்கள் மத்தியில் மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளை, பல்லாயிரக்கணக்கான எங்கள் கட்சியின் ஊழியர்கள் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள், 50 லட்சம் வீடுகளை சந்திப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.