அகமதாபாத்: அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தியில் அமுல் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, அமுல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘பால் விலையில் 4 சதவீதம், அதாவது லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்படுகிறது.