பந்தலூர் : பந்தலூர் அருகே எருமாடு ஆண்டன்சரா பகுதியில் நூறு நாள் வேலைத்திட்ட பணி தளத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அமுதபெருவிழாவாக சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு ஆண்டன்சரா பகுதியில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஆண்டன் சாரா பகுதியில் உள்ள குளத்தை ரூ.12 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.