தருமபுரி: தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில், பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்ப்பட்டுள்ளார். 11ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேரை கைது செய்தனர். ராசிபுரத்தில் உள்ள கே.பி. ராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் துவங்கி வைத்து பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.