அறநிலையத்துறை அதிரடி வாடகை செலுத்தாத ரூ.10 கோடி நிலம் மீட்பு

சென்னை: கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு வாடகை செலுத்தாத நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடி. சென்னை, திருவல்லிகேணி நடுக்குப்பம் பகுதியில் பழண்டியம்மன் கோயிலுக்கு சொந்தமான 5,050 சதுர அடி பரப்பளவு கட்டிடம் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதில் இருந்தவர் வாடகை செலுத்தாமல் இருந்தார். இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பின்படி நேற்று வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் அந்த கட்டிடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும்.

Related Stories: