சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக நியமித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் பொறுப்புத் தலைவராகவும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.