காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்கவும், உடல்நிலை மேம்பட ஏதுவாக விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்.