சென்னை: தமிழக போக்குவரத்து கழகதனியார்மயமாக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா. அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு, கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.