திருத்தணி: திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் வகையில் அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 12.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டம் 2021 22ம் ஆண்டிகான தமிழக அரசு நிதி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர்மன்ற துணைத் தலைவர் ஆ.சாமிராஜ் அனைவரையும் வரவேற்றார்.